Friday, June 4, 2010

வலிகள்.. வரிகள்......

அழுதது போதும்,
இன்னும் எத்தனைப்பேரை இழந்துவிட்டு
இரங்கல் கூட்டங்கள் நடத்தப்போகிறோம் ??
கவலைப்பட்டது போதும்,
கையாலாகாத தனத்தின் துவக்கம்
......கவலையும், கண்ணீரிடுவதும் !!
அழுது, அஞ்சலிகள் செலுத்திக்கொண்டிருந்தால்
கிட்டாது நம் தேசம்...!!
நாம் உயிர்வாழ,
நாம் முயற்சியெடுக்கும்வரை
என்றும் வாழவைக்காது,
பிணம்தின்னும் ' உடன்பிறப்பு '...
மானமிழந்து,
கோழையாய்,
கேடுகெட்டு
வாழ்வதை விட
எவ்வளவோ மேலானது,
' மரணத்துள் வாழ்தல் ' ... !! J