Wednesday, April 20, 2011

வன்னி மக்களை சிறீலங்கா அரசு நடத்தும் விதம்! அதிர்ச்சிப் படங்கள் இணைப்பு



வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விட்டார்கள்... 30 வருட காலப் போர் முடிந்து விட்டது...

இந்தத் தகவல் உத்தியோகபூர்வமாக இலங்கையின் அரச கட்டமைப்புக்களால் அறிவிக்கப்பட்டு இரண்டரை வருடங்கள் முடிந்து விட்டன.

ஆனால் இங்கே கையில் விபரப் பலகையுடன் நிறுத்தப்பட்ட வயதானவர்கள் வன்னியில் வாழ்ந்து கொண்டிருக்கும் எஞ்சிய தமிழ் மக்கள்...

Monday, April 11, 2011

மத்திய அமைச்சரின் ' அருவருப்பு ' பிரசாரம் !!!

கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி அவர்கள் , புதுச்சேரியின் ' இந்திரா நகர் ' காங்கிரஸ் வேட்பாளர் திரு.ஏ.கே.டி.ஆறுமுகம் அவர்களை ஆதரித்து பிரசாரம் பண்ணிக்கொண்டிருந்தார் . அப்போது அவர் பெண்களைக் குறித்து ' அருமையாக ' பேசிய வார்த்தைகளை கீழே காணொளியில் காணலாம் !!!!
#defeatcongress



எதிர்வினை :
இப்பேச்சுக்கு பொதுமக்களிடம் ஏற்பட்ட எதிரொலி குறித்து , விரைவில் பதிவிடுகிறேன் .

நன்றி : Pondicherry Don செய்தி தளம் !

Friday, April 8, 2011

சே குவேராவும் , இந்திய போராட்டமும் !!!

' VICTORY for INDIA '  
' PEOPLE of INDIA WON '

. . . சில மணித்துளிகளாக தொலை ஊடகங்கள் எங்கும் திரை நிரப்பிக்கொண்டிருந்தன இவ்வார்த்தைகள் !
முகநூலிள் கூட எக்கசக்க ' பகிர்வுகள் ' மொய்த்திருந்தன !!!
சாரு அண்ணனின் வலைதளத்தில் ' ஞாநி '  ஏதோ எழுதியிருந்ததாக ' மனுஷ்யப் புத்திரன் ' அவர்கள் முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் . !!!



ம்ம்ம்.....

கிட்டத்தட்ட நான் நினைத்திருந்ததை முழுதாக உணர்ந்து எழுதியிருந்தது போலிருந்தது அப்பதிவு .
அதன் சுருக்கம் இதுதான் ,
' அன்னா ஹசரே அவர்கள் இந்த போராட்டத்தில் இறப்பதற்கு முன்பு , மணிப்பூர் என்றொரு மாநிலமும் , ஐரோம் ஷர்மிளா என்றொரு அறியப்படாத கதாநாயகி இருப்பதையும் அவருக்கு யாராவது முதலில் கற்றுக் கொடுங்கள் !!!!  '

Wednesday, April 6, 2011

உலக முள்வேலிக் கோப்பை : இறுதிப்போட்டி !!!



தினம் தினம் புதைந்துக் கொண்டிருக்கிறோம் 
முள்வேலிகளுக்குள் ,
கோப்பையும் . குதூகலமுமாய் 
உங்கள் மைதானம் . . . !!!!






கம்பிகள் மறைத்தது போக
மீதம் தெரியும் 
இடைவெளிகளின் வழியே,
நேர்க்கோட்டில்
விரிகிறது எங்கள் உலகம் . . . !!!

Monday, April 4, 2011

சில்லூண்டித்தனத்தை காட்டிய ' தினமலர் ' !!!!


ஈழம் என்றால் என்னவென்று கூட தெரியாத ஐந்தறிவு பத்திரிக்கையின் செயல் !!!



( பி.கு. : ஈழத்தை வெல்லும் ' வீரமும் ' , ' யோக்கியதையும்' இன்னமும் ' இந்தியா ' என்னும் தேசத்திற்கு வரவில்லை என்பதை நினைவில் கொள்க ! )

Thursday, March 31, 2011

எனதருமை கிரிக்கெட் பிரியர்களே. . . மனசாட்சியுடன் படியுங்கள் !!!

' இறுதியாட்டத்தை காண ஆவலாக இருக்கும் கிரிக்கெட் இரசிக பெருமக்களுக்கும், பிரியர்களுக்கும் '
தயவு செய்து இதப் படிங்க . . .

' CLICK ME ' 

தமிழில் விரைவில் . . . .